search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெடுஞ்சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்
    X

    சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள்.

    நெடுஞ்சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகள்

    • பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
    • மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு நிலை ஏற்படுகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த உலர் களம் வசதி இல்லைஅரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர்.

    நெடுஞ்சாலையில் நெல் உலர்த்துவதால்வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதோடு, நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிளாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.

    விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சாலியமங்களம் பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    சாலியமங்களம் பகுதியில் 2500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன இங்கு விளைய கூடிய நெல்லை காயவைக்க உலர் களம் இல்லைஅரசு கொள்முதல் நிலையத்திலும் நெல்லை காயவைக்க இடவசதி இல்லைநெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகின்றனர்.

    அதனால விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலைகளில் கொட்டி காய வைக்க வேண்டி உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேற வழியில்லை நெல்லை உலர்த்த அரசு களம் அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×