search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி தற்கொலை
    X

    விவசாயி தற்கொலை

    • மனோகரன் உடல் நலகுறைவால் அவதிப்பட்டு வந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் விஷ மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம், செட்டிப்புலம், சிறையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 46) விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை.

    இவர் உடல் நலகுறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த மனோகரன் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் விஷ மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கரியாப்பட்டி னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×