search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயி வெட்டிக் கொலை
    X

    கொலை செய்யப்பட்ட சந்திரன்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயி வெட்டிக் கொலை

    • கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது.
    • இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா பக்ரிமணியம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 60). விவசாயி. இவர் இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்திரனை சுற்றிவளைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சந்திரன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரனை கொலை செய்த நபர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.

    Next Story
    ×