search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிவாளை காட்டி மிரட்டி நகை பறிப்பு
    X

    அரிவாளை காட்டி மிரட்டி நகை பறிப்பு

    • திருமங்கலம் அருகே தம்பதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி 12 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளயைர்களை தேடிவருகின்றனர்.

    திருமங்கலம்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த ஏனாதியை சேர்ந்தவர் சேகர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது 42).

    கணவன்-மனைவி இருவரும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சி.பி.நத்தம் கிராமத்திலுள்ள தங்களது குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு சாமிகும்பிட்டு மதியம் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி ராய பாளையம் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது 2 பேரும் அரிவாளை காட்டி சேகரை மிரட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

    பின்னர் அவர்கள் பிரியா அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் சேகர் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளயைர்களை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×