என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
    X

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    • விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி பெற்று கொள்ளலாம்.
    • பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

    ஊட்டி:

    2022-2023-ம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி(முழுநேரம்) பெறுவதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடந்த 28-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஊட்டி கிளைக்கு நேரில் சென்று விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையம், சாய்பாபா காலனி, கோவை என்ற முகவரிக்கு கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×