search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்துவரி எண் பெறாதவர்களுக்கு31 -ந் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு- மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு
    X

    ஜெகன் பெரியசாமி.

    தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்துவரி எண் பெறாதவர்களுக்கு31 -ந் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு- மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு

    • கட்டிட உரிமையாளர்கள் சொத்து வரி விதிப்புகளை உறுதி செய்திடும் வகையில் ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டது
    • சொத்துவரி எண் பெறாதவர்களுக்கு 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி பகுதிகளான வார்டு எண் 1, 2, 3, 14 முதல்18, 48, 50முதல்53, மற்றும் 55,57,60 ஆகியவற்றில் அமைந்துள்ள கட்டிடங்களுக்கு ஊராட்சி மூலம் ஏற்கனவே சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு, தொடர்ச்சியாக சொத்து வரி செலுத்தாத காரணமாக மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் கணினியில் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டு ள்ளது.

    எனவே கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சியை தொடர்பு கொண்டு சொத்து வரி விதிப்புகளை உறுதி செய்திடும் வகையில் ஊராட்சி சொத்து வரி ரசீது,பத்திரம் பட்டா, போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் சொத்து வரி நிர்ணயம் செய்யாமல் இருப்பது தொடர்பாக பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது,இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களின் நேரடி ஆய்வின்போது வரிவிதிப்பு எண்கள் பெறப்படாதது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே மேற்படி குறைகளை நிவர்த்தி செய்து ஒழுங்குபடுத்தும் விதமாக சொத்து வரி நிர்ணயம் செய்வதன் பொருட்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் பெரும் வகையில் வாய்ப்பு அளிக்கும் விதமாக மாநகராட்சிக்கான சொத்துவரி எண் இதுவரை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×