என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர்-முதியவர் தற்கொலை
    X

    வாலிபர்-முதியவர் தற்கொலை

    • கோபத்தில் அவசரப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.
    • வீட்டில் பொன்னுசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு உறவின ர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (28). இவரது மனைவி செல்லாயம்மாள்(23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    ஸ்ரீதர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீதருக்கு மது அருந்து பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

    ஸ்ரீதரின் பெற்றோர் இக்கரை தத்தப்பள்ளியில் வசித்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி சென்றுள்ளனர்.

    பெற்றோர் வீட்டில் வைத்தும் ஸ்ரீதர் மது குடித்து உள்ளார். இதனால் கோப மடைந்த அவரது மனைவி கோவில் விசேஷத்திற்காக வந்த இடத்தில் மது அருந்தி வந்துள்ளீர்களே என்று கேட்டுள்ளார்.

    இதனால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு ஸ்ரீதர் வெளியே சென்று விட்டார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு மது போதையில் வந்துள்ளார்.

    அப்போது ஸ்ரீதர் வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மனைவி கேட்டபோது உன்னிடம் தகராறு செய்து விட்டு கோபத்தில் அவசர ப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக கூறினார்.

    இதைக்கேட்ட அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகி ச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் ஸ்ரீதர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கங்கம்பாளையம் வண்ணக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (60). இவரது மனைவி ஜனகரத்தினம். கணவன்-மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் பொன்னு சாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பொன்னுசாமியின் மனைவி உறவினர் வீட்டுக்கு சென்று வந்தார்.

    அப்போது மனைவியை பொன்னுசாமி யாரை கேட்டு ஊருக்கு சென்று வந்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பொன்னுசாமி அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் நீண்ட நேரமாக அவர் வீட்டுக்கு வராததால் அவரை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது மண்ணாங்காடு தோட்ட த்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பொன்னுசாமி தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு உறவின ர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பொன்னுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×