என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்
    X

    தொழிலாளர் வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்

    • தொழிலாளர் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • நிறுவனங்களும் தங்களுடைய வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மண்டல தொழி லாளர் வைப்புநிதி ஆணை யாளர் வீரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள சக்தி சர்க்கரை ஆலை கலையரங்கத்தில் நாளை (29-ந் தேதி) தொழிலாளர் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    காலை 9.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இந்த கூட்டத்தில் தொழிலாளர் வைப்பு நிதி சந்தாதாரர்களும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொழில திபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களும் தங்களுடைய வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×