என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது
- திருட்டு, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதால் வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.
- போலீசார் வாலிபரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோபி:
கோபி பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (45) பழனிச்சாமி (38) இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 7-ந் தேதி கோபியில் உள்ள ஒரு மது கடையில் பீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சேலத்தை சேர்ந்த கவுதம் (22) என்பவர் இருவரிடமும் கூலிங் பீர் கேட்டு தகராறு செய்தார்.
இதில் பீரை கொடுக்க இருவரும் மறுத்ததால் ஆத்திரமடைந்த கவுதம் இருவரையும் பிராந்தி பாட்டிலால் தாக்கினார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கவுதம் மீத திருட்டு, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதால் கவுதமை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கவுதமை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதற்கான நகலை கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கவுதமிடம் போலீசார் வழங்கினர் அதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






