search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    • இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • சேலையால் தூக்கில் தொங்கியபடி வேலன் இருந்து உள்ளார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்தவர் வேலன் (40). இவரது மனைவி தாமரை. இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிய நிலையில் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரவு தூங்க செல்லும் போது தனியாக ஒரு அறையில் கதவை தாழிட்டு விட்டு வேலன் தூங்க சென்றாக தெரிகிறது.

    பின்னர் இன்று அதிகாலை வழக்கம் போல் வேலன் வீட்டில் இருந்தவர்கள் அவர் இருந்த அறை கதவை தட்டி உள்ளனர். அறையில் சத்தம் ஏதும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சேலையால் தூக்கில் தொங்கியபடி வேலன் இருந்து உள்ளார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் விசாரணையில் வேலன் மீது பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் சில திருட்டு வழக்குகள் இருந்ததாகவும், ஒருமாதம் முன்பு வேலன் கைதாகி சிறைக்கு சென்று வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×