என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
- விஷ்ணு சம்பவத்தன்று தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். தந்தையிடம் விஷ்ணு தாங்கள் திருமணம் செய்து கொண்டதால் தங்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
- இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (22). இவரது மனைவி சந்தியா (20). விஷ்ணு, சந்தியா இருவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் 23-ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
விஷ்ணு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்து கொடுக்கும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். திருமணமானதும் விஷ்ணு மனைவியுடன் தனது தந்தை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். பின்னர் விஷ்ணு தனது மனைவியுடன் தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் தனியாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். சந்தியா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் விஷ்ணு சம்பவத்தன்று தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். தந்தையிடம் விஷ்ணு தாங்கள் திருமணம் செய்து கொண்டதால் தங்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை மருமகள் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் வளைகாப்பு செய்யும்போது 2 நிகழ்ச்சியும் ஒன்றாக வைத்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
இதனால் கோபமடைந்த விஷ்ணு தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். நேரடியாக அவர் வீட்டில் அறைக்குள் சென்று கதவை தாழிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தியா கதவை தட்டி உள்ளார். கதவு திறக்கவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் வீட்டின் மேற்கூரையை பெயர்த்து பார்த்தபோது விஷ்ணு தூக்கு போட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே இறங்கி விஷ்ணுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஷ்ணு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் உடலை பார்த்து சந்தியா அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்