search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலி தொழிலாளி திடீர் சாவு
    X

    கூலி தொழிலாளி திடீர் சாவு

    • சம்பவத்தன்று சாமிநாதன் இடைவிடாது வாந்தி எடுத்துள்ளார்.
    • உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்துள்ள மொட்டனம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (41). இவரது கணவர் சாமி நாதன் (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சாமிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சாமிநாதன் இடைவிடாது வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    நேற்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சாமி நாதன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×