என் மலர்
உள்ளூர் செய்திகள்

வயல்களில் தேங்கிய மழை வெள்ளம்
- அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் லேசானது முதல் மிதமான மழையாக தொடர்ந்து விடிய, விடிய விட்டு விட்டு பெய்து வந்தது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் அம்மாபேட்டை பகுதியில் 68.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வானம் மேக மூட்டமாக காணப்ப ட்டது. இரவில் லேசானது முதல் மிதமான மழையாக தொடர்ந்து விடிய, விடிய விட்டு விட்டு பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பொழிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்த மழை விடிந்த பின்பும் நேற்று காலை 9 மணி வரை மிதமான மழை பொலிவு இருந்தது.
இதனால் அம்மா பேட்டை, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சென்னம்பட்டி, கொமராயனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
கடந்த 2 நாட்களில் மட்டும் அம்மாபேட்டை பகுதியில் 68.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Next Story