என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    ஆடி 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • ஆடி 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • பக்தர்கள் குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவினர்

    ஈரோடு,

    ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.இதையொட்டி அதி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்ட னர். மேலும் பலர் குண்டம் வளர்க்கப்பட்ட இடத்தில் உப்பு, பிளகு மற்றும் மஞ்சள், குங்குமம் போட்டு அம்மனை வழிபட்டனர். கோபி செட்டிபாளையம் அடுத்த பாரியூர் கொண்ட த்து காளியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    மேலும் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் பால மாரியம்மன், தான் தோன்றியம்மன், கொள்ப்ப லூர் பச்சை நாயகியம்மன், அளுக்குழி செல்லியாண்டி அம்மன், வாய்க்கால் மேடு முத்து மாரியம்மன், சீதா லட்சுமி புரம் தண்டு மாரிய ம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும் அம்மனு க்கு சிறப்பு பூஜை நடந்தது.பவானி நகரின் காவல் தெய்வமான செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி க்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவ ருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    அதேபோல் வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத் தெரு மாரியம்மன் கோவில், பழனிபுரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், தேவபுரம் கருமாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்கள் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ர காளியம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை, முக்கிய விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அந்தியூருக்கு காவல் தெய்வமாக விளங்கும் பத்ரகாளியம்மன் வழிபட்டு சென்றால் அனைத்து செயல்களும் நன்மையில் முடியும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் தொடங்கியது முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    இதில் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமையான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார செய்யப்பட்டு காய், கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவி லுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாத மாக வழங்க ப்பட்டது. சென்னிமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அம்மன் கோவி ல்களில் இன்று ஆடி வெள்ளியை யொட்டி சிறப்பு பூஜைகள் வழிபாடு நடை பெற்றது. சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள மாரி யம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடை பெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் சென்னி மலை அடுத்துள்ள முருங்க த்தொழுவு வாகைத்தொழுவு அம்மன் கோவிலில் கோ பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஈங்கூர் தம்பிரா ட்டி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.மேற்கு புதுப்பாளையம் அங்காளம்மன் கோவில் சென்னிமலை டவுன் பிராட்டி அம்மன், எல்லை மாகாளி அம்மன் கோவி லிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவகிரி பொன்காளி யம்மன், காமாட்சி அம்மன், எல்லை மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பக்தர்களு க்கு கூழ் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. கவுந்தப்பாடி ராஜ ராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபாடு நடந்தது. மேலும் ஏராளமான பக்தர்கள் கூழ் கொண்டு வந்து வழிபாடு நடத்தினர். பு.புளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் உள்ள மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று மாலை கோவிலில் விளக்கு பூஜை நடக்கிறது. இதே போல்ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டது.

    மேலும் ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் மணிக்கூண்டு கொங்கால ம்மன் கோவிலில் காலை வியாபாரிகள் மற்றும் பெண்கள், பக்தர்கள் என பலர் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளிய ம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கோவிலில் பெண் பக்தர்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல்கள் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினர்.மேலும் ஈரோடு காரை வாய்க் கால் மாரியம்மன், கருங்கல் பாளையம் சின்ன மாரிய ம்மன், சூரம்பட்டி மாரி யம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்து பண்ணாரி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி 18 மற்றும் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு செலுத்தி விளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட தாலி சரடு, வளையல்களை பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவியும், சூலாயுதத்தில் எலுமிச்சை கணிகளை குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.மேலும் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×