என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை
    X

    ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 731-க்கு விற்பனையானது.

    கொடுமுடி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 ஆயிரத்து 392 எண்ணிக்கையிலா 12 ஆயிரத்து 218 கிலோ எடையுள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22.10 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.24.59 காசுகள், சராசரி விலையாக ரூ.23.39 காசுகள் என்ற விலைகளி்ல் ஏலம் போனது.

    மொத்தம் ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 731-க்கு விற்பனையானது.

    Next Story
    ×