search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
    X

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
    • முன்பு 300 வரை பரிசோதனை செய்து வரப்பட்ட நிலையில் தற்போது தினமும் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ப்பட்டு வருவதாக சுகா தாரத் துறையினர் தெரி வித்துள்ளனர்.

    ஈரோடு, ஜூலை.24-

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளி யிட்டுள்ள பட்டி யல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 637 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவ தால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறி முறை களை முறையாக பின்பற்ற வேண்டும். பொது மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் தற்போது மாவட்டத்தில் மேற்கொள்ள ப்பட்டு வரும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 300 வரை பரிசோதனை செய்து வரப்பட்ட நிலையில் தற்போது தினமும் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ப்பட்டு வருவதாக சுகா தாரத் துறையினர் தெரி வித்துள்ளனர்.

    Next Story
    ×