search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின் நிறுத்தம்
    X

    நாளை மின் நிறுத்தம்

    பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.

    ஈரோடு:

    பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரேநகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம்,

    தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,

    தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்ட செல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி,

    மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு,

    மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×