search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மோதி மூதாட்டி பலி
    X

    வேன் மோதி மூதாட்டி பலி

    • வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேன் ஒன்று பின் நோக்கி வந்தபோது எதிர்பாராத விதமாக முத்தையாள் மீது மோதியது.
    • பங்களாப்புதூர் போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் சந்திரசேகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன் (80), இவரது மனைவி முத்தையாள் (80).

    முத்தாயாள் நேற்று இரவு தனது உறவினரை பார்க்க கள்ளியங்காடு சேர்மேன் தோட்டம் வண்டிப்பாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, தோட்டத்திற்குள் இருந்து வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேன் ஒன்று பின் நோக்கி வந்தபோது எதிர்பாராத விதமாக முத்தையாள் மீது மோதியது.

    இதில் இடது முழங்காலில் அடிபட்டு படுகாயமடைந்த முத்தையாளை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முத்தையம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

    பங்களாப்புதூர் போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் சந்திரசேகர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×