என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் மூலம் கல்லூரி மாணவர் பலரிடம் கோடி கணக்கில் மோசடி
- ஆன்லைன் டிரேடிங் மூலம் கல்லூரி மாணவர் பலரிடம் கோடி கணக்கில் மோசடி செய்துள்ளார்.
- இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் வைரமுத்து பாலாஜி. இவர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஒரு மருந்தியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் உடன் படிக்கும் கல்லூரி மாணவ ரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த மாணவர் சஞ்சய் ஆன் லைன் டிரேடிங் ஆப் மூலம் சக மாணவர்கள் இடம் 40 நாட்களில் பணம் இரட்டிப்பு செய்து வருவதாக கூறி உள்ளார்.
இதனை நம்பி வைரமுத்து பாலாஜி ரூ. 49 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்து உள்ளார்.ஆனால் 40 நாட்களுக்கு மேல் ஆகியும் பணம் தராமல் ஏமாற்றி வந்து உள்ளார். மேலும் கொடுத்த பணத்தை கேட்டாலும் தராமல் வந்து உள்ளார். இது தொடர்பாக வைரமுத்து பாலாஜி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகரிடம் புகார் மனு அளித்தனர். இது குறி த்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிர ண்டு ஜவகர் ஈரோடு மாவ ட்ட குற்றப்பிரிவு போலீ சாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சையை கைது செய்து விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் சஞ்சய் இதேபோன்று பல்வேறு மாணவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி மோசடி செய்தது தெரிய வந்தது. பின்னர் சஞ்சை நீதிமன்ற த்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டார். சஞ்சயிக்கு உடந்தை யாக பலர் இருந்துள்ளனர். அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.






