search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,878 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
    X

    பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,878 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,878 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது
    • கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொட ர்ந்து குறைந்து வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்களி ன் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை ப்பகுதி உள்ளது.கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொட ர்ந்து குறைந்து வருகிறது.அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 70.74 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 878 கன அடியாக நீர் வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளி ங்கராயன் பாசனத்திற்கு 450 கனஅடியும், குடிநீரு க்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.68 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 10.99 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.98 அடியா கவும் உள்ளது.

    Next Story
    ×