search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
    X

    ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

    • ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெளியிடபட்டுள்ளது
    • வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.75 அடியாகவும் உள்ளது.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக விளங்கும் பவானி சாகர் அணையின் நீர்ப்பிடி ப்பு பகுதியில் மழைப்பொ ழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வரு கிறது. இன்று காலை நில வரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.35 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 674 கன அடியாக குறைந்து ள்ளது.

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசன த்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், குடிநீரு க்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி யும் என மொத்தம் அணை யில் இருந்து 805 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. அதே சமயம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகி றது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.11 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 18.53 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 21.75 அடியாகவும் உள்ளது.

    Next Story
    ×