search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்றவர் கைது
    X

    கஞ்சா விற்றவர் கைது

    • கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த வேட்டுவன்புதூர் மாதேஸ்வரன் கோவில் அருகே கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கொங்கர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த சந்திரன் (47) என்பதும், சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் சந்திரனை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×