search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வயரில் தொங்கிய கம்பியால் பரபரப்பு
    X

    மின்வயரில் தொங்கிய கம்பியால் பரபரப்பு

    • அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் எதிரே செல்லக்கூடிய மின் வயர் மீது பறவைகள் கம்பியை கொண்டு சென்றபோது மின் கம்பியின் மீது போட்டுவிட்டு சென்று விட்டது.
    • இதையடுத்து அந்த கம்பி அகற்றப்ப ட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் எதிரே செல்லக்கூடிய மின் வயர் மீது பறவைகள் கம்பியை கொண்டு சென்றபோது மின் கம்பியின் மீது போட்டுவிட்டு சென்று விட்டது.

    இதனால் அந்த கம்பி மின்கம்பியிலிருந்து சாலையின் கீழ் பகுதி வரை தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் அந்த கம்பியை தொட்டால் மின்தாக்கிவிடும் என்ற அச்சத்தில்ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வர தாமதம் ஆகிவிட்டது.

    இதனால் காலை நேரங்களில் பள்ளிக்கு குழந்தையை கொண்டு சென்று விட்டு செல்லும் பெற்றோர்களும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் அச்சத்தோடு சென்றனர்.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அட்டையும் கற்களையும் வைத்து பொ துமக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி அந்த கம்பியில் மோதாமல் செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டி ருந்தனர். இதையடுத்து அந்த கம்பி அகற்றப்ப ட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×