search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்ட அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
    X

    ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்ட அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்ட அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
    • மஞ்சள், குங்குமம், வளையல் வைத்து வழிபாடு

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை யொட்டி இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பமட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. இதையொட்டி அதி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்ட னர். மேலும் பலர் குண்டம் வளர்க்கப்பட்ட இடத்தில் உப்பு, பிளகு மற்றும் மஞ்சள், குங்குமம் போட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகள வில் இருந்தது. அதே போல் கோபி செட்டிபாளையம் அடுத்த பாரியூர் கொண்டத்து காளியம்மன், கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார். மேலும் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் பால மாரியம்மன், தான் தோன்றியம்மன், கொள்ப்ப லூர் பச்சை நாயகியம்மன், அளுக்குழி செல்லியாண்டி அம்மன், வாய்க்கால் மேடு முத்து மாரியம்மன், சீதா லட்சுமி புரம் தண்டு மாரிய ம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும் அம்மனு க்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவில்க ளில் கூழ் ஊற்றப்பட்டது.

    பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பவானி நகரின் காவல் தெய்வமான செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. அதேபோல் வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத் தெரு மாரியம்மன் கோவில், பழனிபுரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், தேவபுரம் கருமாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவி ல்கள் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இன்று ஆடி வெள்ளி க்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை முதலே அந்தியூர், தவிட்டு ப்பாளையம், வெள்ளி யம்பாளையம், புதுப்பாளை யம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், பச்சா ம்பாளையம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    சென்னிமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அம்மன் கோவி ல்களில் இன்று ஆடி வெள்ளியை யொட்டி சிறப்பு பூஜைகள் வழிபாடு நடை பெற்றது. சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள மாரி யம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடை பெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக ராகி கூழ் மற்றும் பாயாசம் வழங்கி னார்கள்.

    அதேபோல் சென்னி மலை அடுத்துள்ள முருங்க த்தொழுவு வாகைத்தொழுவு அம்மன் கோவிலில் கோ பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடை பெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேற்கு புதுப்பாளையம் அங்காளம்மன் கோவில் சென்னிமலை டவுன் பிராட்டி அம்மன், எல்லை மகாளி அம்மன் கோவி லிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதே போல்ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டது இதை யடுத்து இன்று அதிகாலை கோவில் ஏராளமான பெண்கள் வந்து அம்மனை வழிபட்டனர். மேலும் ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர்.

    இதே போல் மணிக்கூண்டு கொங்கா லம்மன் கோவிலில் காலை வியாபாரிகள் மற்றும் பெண்கள், பக்தர்கள் என பலர் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளிய ம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அங்காரம் செய்ய ப்பட்ட சிறப்பு அங்காரம் செய்யபப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து கோவிலில் பெண் பக்தர்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல்கள் அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினர். மேலும் ஈரோடு காரை வாய்க் கால் மாரியம்மன், கருங்கல் பாளையம் சின்ன மாரிய ம்மன், சூரம்பட்டி மாரி யம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×