search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொடக்குறிச்சி அருகே விவசாயியிடம் ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் முதியவர் கைது
    X

    மொடக்குறிச்சி அருகே விவசாயியிடம் ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் முதியவர் கைது

    • மொடக்குறிச்சி அருகே விவசாயியிடம் ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் முதியவர் கைது செய்யபட்டார்
    • தலைமறைவான 6 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

    ஜூலை.

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசி லம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டி பாண்டி (50) என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமானார். இந்த நிலையில் சிவாஜி யிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்பவரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்ச த்துக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கு வதாக கூறினார்.

    இதையடுத்து சிவாஜி ரூ.15 லட்சம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்து க்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ்குமார் மற்றும் டிரைவர் குபேந்தி ரன் ஆகியோருடன் லக்கா புரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார். இது குறித்து ராஜ்குமாரு க்கு சிவாஜி தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 பேருடன் சம்பவ இடத்துக்கு வந்தார். இதை தொடர்ந்து ராஜ்குமார் தனது காரில் சிவாஜி, செந்தில் ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

    இதையடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரில வந்த ஒரு காரில் இருந்து 4 பேர் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக் கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனை அடுத்து ராஜ்குமார் காரில் ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது. இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விவசாயிடம் பணம் பறித்த கார், கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம் நாகம்பள்ளி அரசு மருத்துவமனை அடுத்த போஸ்ட் ஆபீஸ் தெரு மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (58) என்ப வரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் தலை மறைவாக உள்ள 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×