என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுந்தப்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கவுந்தப்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கவுந்தப்பாடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தீயணைப்பு த்துறையினர் மாணவர்களிடத்தில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மாணவர்கள் தங்களையும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் எவ்வாறு காப்பாற்றுவது என்று செய்முறை விளக்கம் செய்து காட்டினர்

    கவுந்தப்பாடி,

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பவானி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு சார்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்க டேசன் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான பாவா தங்கமணி தொடங்கி வைத்தார்.

    தீயணைப்பு த்துறையினர் மாணவர்களிடத்தில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்வது, தங்களையும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் எவ்வாறு காப்பாற்றுவது என்று செய்முறை விளக்கம் செய்து காட்டி மாணவர்களி டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள். இதையடுத்து மாணவர்க ளுக்கு பயிற்சி அளிக்க ப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டார்கள். இதற்னான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு வினர் செய்திருந்திருந்தனர்.

    Next Story
    ×