என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவியை வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்த வீடியோ வைரல்
- மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் பதிவாகி இருந்தது.
- இந்த வீடியோ தற்போது சமூக வளைதலைங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் நவீன் குமார் (21). பெயிண்டராக வேலை செய்து வரும் இவர் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் சத்திய மங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை நவீன்குமார் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாணவியின் பின்னால் சுற்றி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில், நவீன்குமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.
இதில் மாணவியின் கழுத்தில் 6 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. வலியால் அலறித்துடித்த மாணவியின் குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே நவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை அங்கிரு ந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நம்பியூரில் வைத்து நவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவி பின்னால் நவீன் செல்லும் காட்சி, மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ தற்போது சமூக வளைதலைங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவி பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.






