search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையின் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து
    X

    சாலையின் தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து

    • உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
    • டிரைவர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் லாரியின் முன்பக்கம் சேதம் ஏற்பட்டது. டிரைவர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

    விடியற்காலை நேரம் என்பதால் டிரைவர் கண் அயர்ந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×