என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை பெற்ற 45-வது நாளில் இளம்பெண் தற்கொலை
    X

    குழந்தை பெற்ற 45-வது நாளில் இளம்பெண் தற்கொலை

    • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது கவுரி மீனா துப்பட்டாவால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.
    • தகவல் அறிந்த அவரது தாய் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள கம்பிளியம்பட்டி, காசிலிங்க கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி கவுரி மீனா (வயது 27). இவர்களுக்கு தரணிகா (3) மற்றும் பிறந்து 45 நாட்களே ஆன தக்ஷிதா என்று பெண் குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் கவுரி மீனா தனக்கு குழந்தை பிறந்ததால் தனது தாய் வீடான சக்கரைகவுண்டன் பாளையம் பகுதியில் இருந்துவிட்டு கடந்த வாரம் கணவர் வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கியுள்ளார்.

    தகவல் அறிந்த அவரது தாய் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த நிலையில் இது தொடர்பாக பெருந்துறை டி.எஸ்பி. (பொறுப்பு) அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×