என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு அனுமதியின்றி மது விற்ற 9 பேர் கைது
- அரசு அனுமதியின்றி மது விற்ற 9 பேர் கைது செய்யபட்டனர்
- 60 மதுபாட்டில்கள் பறிமுல்
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்ப தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு டவுண், கடம்பூர், சித்தோடு, வரப்பாளையம், பங்களாபுதூர், ஈரோடு தெற்கு, சிறுவலூர், கவுந்த ப்பாடி போலீசார் அந்தந்த சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது அரசு அனும தியின்றி சட்டவிரோதமாக மதுவிற்றுக் கொண்டிருந்த சத்தியமங்கலம் கடம்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன் (வயது 48), கவுந்தப்பாடி அய்யன் வலசை சேர்ந்த கார்த்திகேயன் (32), நம்பியூர் சூரியப்பம்பாளையம் நாகராஜன் (34), சாஸ்திரி நகர் மணிமுத்து என்ற ஜெயக்குமார் (50), கோபி கொண்டையம்பாளையம் ஈஸ்வரன் (53), நம்பியூர் ராயர் பாளையம் சரஸ்வதி (54), சித்தோடு கொங்கம்பா ளையம் மணி (60), கடம்பூர் பசுவனபுரம் பழனிவேல் (28), புதுக்கோட்டை கறம்ப க்குடி சாமுவேல் (39) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவ ர்கள் வைத்திருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த காசி பாளையத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (40), பிரசாந்த் (30) ஆகியோரை ஈரோடு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்தி ருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






