என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதைப் பொருள்கள் விற்ற 7 பேர் கைது
- போதைப் பொருள்கள் விற்ற 7 பேர் கைது செய்யபட்டனர்
- போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், அந்தியூர், வெள்ளித்திருப்பூர், கோபி, ஈரோடு வடக்கு, அம்மாபேட்டை, பவானி, போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு மரப்பாலம், அந்தியூர், பவானி ரோடு, மூலையூர், கோபி, நாராயண வலசு, பூதபாடி, நல்லிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருள்களை விற்ப னை செய்து கொண்டிருந்த மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஷாஜகான் (வயது 55), பவானி ஜோதி விநாயகர் தெரு மாதேஸ்வரன் மனைவி அமுதா (39), வெள்ளி திருப்பூர் மூலையூர் முத்து மகன் மூர்த்தி (40), கோபி வி.ஐ.பி. டீச்சர் நகர் ராமசாமி மகன் மணிக ண்டன் (45), நாராயண வலசு இந்திரா நகர் முகு ந்தன் மகன் வெங்கடேசன் (55), அந்தியூர் அண்ணா நகர் சாமியப்பன் மகன் பன்னீர்செல்வம் (46), பவானி சின்ன மூலப்பா ளையம் செல்லவேல் மகன் ரமேஷ் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த கூலிப், ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழ க்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.






