என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது
    X

    அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது

    • அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து சென்ற னர். இதில் புதுப்பா ளையம் மாரியம்மன் கோயில் அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நம்பியூர் பொலவபாளையத்தை சேர்ந்த திருமூர்த்தி (வயது 44) என்பவரை வரப்பா ளையம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியில் மது விற்பனை யில் ஈடுபட்ட பாரதிபுரத்தை சேர்ந்த முருகன் (40) என்பவரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர்.

    புளியம்பட்டி பகுதியில் மது விற்ற உக்கரம் பகுதியை சேர்ந்த சீரஞ்சிவி (30) என்பரை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். நீலம்பாளையம் அருகே மது விற்றுகொண்டிருந்த அண்ணா நகர் புதுகால னியை சேர்ந்த செல்வன் (42) என்பவரை சிறுவலூர் போலீசார் கைது செய்தனர். கொங்கர்பாளையம் அருகே மழ விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (45) என்பவரை பங்களா புதூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆசனூர் காட்டே ஜ்ஜில் மது குடிக்க அனு மதித்த நிர்வாகி முத்துசாமி (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×