என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது
    X

    சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது

    • சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு வீரப்பன் சத்திரம், பெருந்துறை மற்றும் கடத்தூர் போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த, ஈரோடு, ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் (வயது 50), பெருந்துறை சென்னிமலை ரோடு விக்னேஷ் நகரைச் சேர்ந்த செந்தில் (37), கடத்தூர் மூலவாய்க்காலைச் சேர்ந்த தர்மலிங்கம் (40) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×