என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெங்காய வியாபாரி போல் நடித்து சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
- வெங்காய வியாபாரி போல் நடித்து சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யபட்டனர்
- சரக்கு ஆட்டோ, வெங்காயம் ட்ரம்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதி, தமிழகம்-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது. மலை கிராமங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு விநியோ கிக்கப்படும் அரிசியை சிலர் சட்ட விரோதமாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மெட்டல் வாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சரக்கு ஆட்டோ வில் இருவர் வெங்காயம் விற்பனை செய்து கொ ண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவ ர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் அவர்கள் இரு வரும் மெட்டல் வாடியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து பிளாஸ்டிக் ட்ரம்க ளில் நிரப்பி கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றதும், இருவரும் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த பசில்பாட்சா (வயது 43), ஆசிபுல்லா (39) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவ ரையும் பிடித்த போலீசார் சரக்கு வாகனத்துடன் ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர். தொடர்ந்து 2 பேரையும் உணவு பொ ருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோ, வெங்காயம் ட்ரம்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.






