என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது
- கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடு.
ஈரோடு மாவட்டம் கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கோவை மாவட்டம் அம்மன் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் என்ற கிஷோர் (வயது 26), கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் மனோஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் எடையுள்ள ரூ 33 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






