என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி, பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேட்டி
- அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- இந்த வெற்றி, பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று ரூபி மனோகரன் கூறினார.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி
எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் கூறியதாவது:-
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட எங்கள் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியை வழங்கியுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், இந்த தேர்தலுக்காக கடும் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பாராளு மன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க. - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள இந்த அபார வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயமாக எதிரொலிக்கும். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தே தீரும்.
இவ்வாறு ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்