என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
- மானியங்கள் எவ்வளவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
- கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
அரவேணு,
கோத்தகிரி அருகே தேனாடு, கெங்கரை, அரக்கோடு மற்றும் கடினமாலா ஊராட்சிகளில் உள்ள சுய உதவி பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் யூ.என்.சி.எஸ் மூலம் கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தொழில் மையம் இயக்குனர், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர், வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு புத்தாக்க திட்ட அலுவலர், மற்றும் யூ.என்.சி.எஸ். தலைமை அலுவலர் மற்றும் களப்பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட தொழில் மையம் மூலம் எந்தவிதமான தொழில்களுக்கு தனி நபர் கடன் வழங்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு தொழிற்கும் எவ்வளவு கடன் கொடுக்கப்படுகிறது அதற்கான மானியங்கள் (25 சதவீதம் மற்றும் 35 சதவீதம்) எவ்வளவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் மகளிர் சுய உதவி குழுவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. இதில் வங்கி பொது மேலாளர் சண்முகம் சிவா, யூ.என்.சி.எஸ்.கள இயக்குனர்சிங்கராஜ், மகளிர் திட்ட அலுவலர்கள் பரமேஷ்வரி, சுமித்திரா,வாழ்ந்து காட்டுவோம் அமைப்பு அலுவலர்கள் பச்சையப்பன், ஜெயந்தி, களபணி சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்