என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
- காளான் வளர்ப்பு , கம்ப்யூட்டர் டேலி போன்ற முப்பது வகையான தொழில் பயிற்சி பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது.
- மானியங்கள் குறித்து மகளிர் சுய உதவி பெண்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
அரவேணு,
கொணவக்கரை, ஜக்கனாரை ஆகிய இரு ஊராட்சி உட்பட்ட யூ.என்.சி எஸ் மூலம் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உள்ள பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கூட்டத்தில் கனரா வங்கி தொழிற் பயிற்சி இயக்குனர், மாவட்ட தொழில் மைய மேலாளர் வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனர். கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் மூலம் தையல் பயிற்சி, மெழுகுவர்த்தி, சோப்பு ஆயில், பினாயில், சாக்லேட் ,காளான் வளர்ப்பு , கம்ப்யூட்டர் டேலி போன்ற முப்பது வகையான தொழில் பயிற்சி பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட தொழில் மையம் மூலம் எந்தவிதமான தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது ஒவ்வொரு தொழிற்கும் எவ்வளவு கடன் கொடுக்கப்படுகிறது அதற்கான மானியங்கள் எவ்வளவு வழங்கப்படும் என்று மகளிர் சுய உதவி பெண்களுக்கு எடுத்துரைத்தார்.
வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் மகளிர் சுய உதவி குழுவின் முக்கியத்துவம் ,பி எல் எம் மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகள், வங்கி கடன்கள், சுய உதவி பெண்கள் தொழில் செய்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்