search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பெட்டகங்கள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பெட்டகங்களை ஒரு குழந்தைக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய போது எடுத்த படம்.

    தூத்துக்குடி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பெட்டகங்கள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • தமிழகத்தில் உள்ள அங்கன்வாடியில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.
    • அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், குழந்தைகளின் வருகை மற்றும் கட்டமைப்புகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை யின்படி சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடியில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, தூத்துக்குடி டூவிபுரம் 5-ம் தெரு சங்கரநாராயணன் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் 51 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பெட்டகங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், குழந்தைகளின் வருகை மற்றும் கட்டமைப்புகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 28 மையங்களில் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் வக்கீல் பால குருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்ன லட்சுமி, கவுன்சிலர்கள் அதிர்ஷ்டமணி, ராம கிருஷ்ணன், சுரேஷ்குமார், கனகராஜ், பொன்னப்பன், சரவணகுமார், விஜயகுமார், எடின்டா, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டாலின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர மருத்துவர் அணி அமைப் பாளர் அருண்குமார், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால் ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மார்கின் ராபர்ட், வட்டச் செயலாளர்கள் பாலு, கதிரேசன், சிங்கராஜ், பொன்னப்பன், மகளிர் அணி கவிதாதேவி, ரேவதி, பெல்லா, சந்தனமாரி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங் மற்றும் மணி, அல்பட், சுந்தர்ராஜ், பாஸ்கர், மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×