என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்- கோவை கலெக்டர் அதிரடி உத்தரவு
- வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.
- 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதிய ஊழியர்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக, அதிகாரிகள் உடனான ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் கிராந்திகுமார் கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது:-
கோவையில் வடகிழக்கு பருவமழை வெகுவிரைவில் தொடங்க உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள சப்-கலெக்டர், கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதிய ஊழியர்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும்.
மேலும் வெள்ளம், இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 0422-1077 டோல்பிரீ எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும்.
நீர்வழித்த டங்களில் ஆக்கிரப்புகள் இருந்தால் அவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும். பேரூர் நொய்யல் மற்றும் மேட்டுப்பா ளையம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணை களிலும் அதிகாரிகள் ஆய்வுசெய்து தண்ணீர் கொள்ளளவு, அணையின் உறுதித்தன்மை ஆகிய வற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்களை தங்க வைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் முன்கூட்டியே ஈடுபட வேண்டும். இதற்காக அந்தந்த பகுதிகளில் திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு கூட்டங்களை தேர்வு செய்து அங்கு தங்க வைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தரும் வகையில் அதிகாரிகள் தனித்தனி குழுக்களை அமைத்து செயல்பட வேண்டும்.
இதன்ஒருபகுதியாக அந்தந்த பகுதிகளில் உள்ள தாசில்தார்கள் தலைமையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பி.டி.ஓ ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் போலீசார், தீயணைப்பு படை, ஊரக வளர்ச்சி, கால்நடை, வேளாண்-தோட்டக்கலை மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
கிராம நிர்வாக அதிகாரிகள் தலைமையில் ஊராட்சி செயலர், அங்க ன்வாடி-சத்துணவு அமைப்பாளர்கள், வனக்காவலர்கள் ஆகியோர் குழுவாக ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்