search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில்  மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    • நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பாக, மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று மக்களின் குறைதீர்க்கப்படுகிறது.

    அதன்படி ஜூலை மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 13-ந் தேதி மாலை 3 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20-ந் தேதி மாலை 3 மணிக்கு திருச்செங்கோடு செயற் பொறியாளர் அலுவலகத்திலும், 27-ந் தேதி மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிர்வர்த்தி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×