search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம்
    X

    பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனத்தை தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    சிவகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மின்சார வாகனம்

    • சிவகிரி பேரூராட்சியில் தூய்மை பணிகளுக்கு 14 மின்சார வாகனம் வாங்கப்பட்டது
    • சிறப்பு விருந்தினராக வாசு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளருக்கு 14 மின்சார வாகனம் வாங்கப்பட்டு அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வாசு யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×