என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே கோஷ்டி மோதலில் பெண்கள் உள்பட 8 பேர் காயம்
- மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்த கூறியதால் சேகருக்கும், கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த சேகர் குடும்பத்தினரும், கிருஷ்ணன் குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர்(வயது 48). விவசாயி. இவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது, அதே தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டு முன் நின்ற மோட்டார் சைக்கிள் இடைஞ்சலாக இருந்துள்ளது.
இதனைதொடர்ந்து சேகர், அதனை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த சேகர் குடும்பத்தி னரும், கிருஷ்ணன் குடும்பத்தினரும் ஒருவருக் கொருவர் கம்பு, இரும்பு கம்பிகளால் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் சேகர் தரப்பில் சேகர், அவரது மனைவி பூமாதேவி, மகள் பவித்ரா (21), மகன் அரவிந்த்குமார் (25), ஆகியோரும், கிருஷ்ணன் தரப்பில் அவரது மகள் அமுதா (41), மகன்கள் அருணாச்சலம் (34), கார்த்திக் ராஜா (27) மாரி யப்பன் மகன் சூர்யா (23) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சேகர், பூமாதேவி, பவித்ரா, அரவிந்த் குமார் ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும், அமுதா, அருணாச்சலம், கார்த்திக், சூர்யா ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






