search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி நடத்தினார்- முன்னாள் அமைச்சர் பேச்சு
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.

    ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி நடத்தினார்- முன்னாள் அமைச்சர் பேச்சு

    • அ.தி.முக. பத்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு குறையை சொல்லி இருக்க முடியுமா.
    • திறப்பு விழா திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரத்தில் கோட்டூர் தெற்கு, வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியதாவது, ஆகஸ்ட் 15ம் தேதியை பிரதமர் பழங்குடி தினமாக அறிவித்துள்ளார். இது நமக்கு எவ்வளவு பெரிய பெருமை. நமக்கு இதுதான் சமத்துவம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அ.திமுக., பத்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு குறையை சொல்லி இருக்க முடியுமா. ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் ஆட்சியை சிறப்பாக நடத்தினார். மக்களுடைய தேவைகளை நிறைவேற்றினார். மக்களுடைய தேவையான திட்டங்களை இன்றைக்கு திமுக புறக்கணிக்கிறது. இன்றைக்கு நடைபெற்ம் திறப்பு விழா திட்டங்கள் எல்லாமே அ.திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள். மக்கள் நமக்கு ஆதரவை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பொதுக்கு–ழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடியார் அணிக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிக்க–ப்பட்டது. மாவட்ட செயலாளரை இடைக்கால பொது–ச்செயலாளர் கழகத்தின் அமைப்பு செயலா–ளராக அறிவித்ததற்கு பாராட்டுகளை தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் டாக்டர்.கோபால், சிவா.ராஜமாணிக்கம், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், அவைத் தலைவர் சுப்பிரமணியன், கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா சேட், அவைத்தலைவர் கண்ணன், தகவல் தொழில் நுட்ப ஒன்றிய அணி செயலாளர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×