என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள்
    X

    ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை காணலாம்

    ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள்

    • ஒற்றை தலைமை வேண்டுமென எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    அ.தி.மு.க.வின் பொதுக்குழு வருகிற 23-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.

    அப்போது ஒற்றை தலைமை வேண்டுமென எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இரட்டை தலைமையை தொடர வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஏற்றை தலைமை கோஷம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதேபோல் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    அந்த போஸ்டரில் கழகத்தின் பொதுச்செயலாளரே, தமிழகத்தின் எதிர்காலமே, கட்சியின் காவல் தெய்வமே, அ.தி.மு.க தொண்டர்களில் உயிர்மூச்சே, எங்களின் நிரந்தர தலைவர், எடப்பாடியாரே வாழ்க! வாழ்க!! போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம் அருகே, கருங்கல் பாளையம், வீரப்பன்சத்திரம், மொடக்குறிச்சி பகுதி முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    Next Story
    ×