search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளில் புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    அரசு பள்ளிகளில் புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கண்காட்சியில் பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் இடம் பெற்றன.
    • நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே குத்தாலம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி துவங்கி வைத்தார். கண்காட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் மாற்று பொருள்கள் இடம் பெற்றன.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் புவி தினம் பற்றியும் மனிதர்களின் செயலால் பூமிக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்தும் அதை எதிர்கொள்வது குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தலைமை ஆசிரியை செல்லம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். தேசிய பசுமை படை ஆசிரியர் காட்சன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் சண்முகநாதன் ஆசிரியை தமிழ்ச்செல்வி பெற்றோர் கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    இதைபோல் வடக்காலத்துர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புவி தின விழா அனுசரிக்கப்பட்டது. தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் தலைமை ஆசிரியை பத்மாவதி தேசிய பசுமைப்படை ஆசிரியை ருபான்சியா ஆசிரியர் செந்தில் வேலன் ஆசிரியை சுமதி ராணி பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மஞ்ச–ப்பையும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×