என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோகப்புபடம்
அவினாசி பகுதியில் பராமரிப்பு பணிகாரணமாக நாளை மின்தடை
- உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது.
- திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருப்–பூர்,
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அவினாசி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின்நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், ஜெ.ஜெ.நகர், கந்தம்பாளையம், நாதம்பாளையம், புள்ளே கவுண்டம்பாளையம், வினாயகா ரிச் லேண்ட், அபிராமி கார்டன், இந்திராநகர், ஏ.எஸ்.காலனி, காவிலிப்பாளையம்புதூர், அப்போலோ அகரம், மொண்டிபாளையம், ஆலத்தூர், தொட்டிபாளையம், திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.