search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் பாரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
    X

    டாஸ்மாக் பாரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது

    • டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்த சென்றனர்.
    • இதில் லால் என்ற சபீர் அகமது மீது 15 வழக்குகள், சுல்தான் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    கோவை

    மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் லால் என்ற சபீர் அகமது (வயது35), வ.உ.சி நகர் சந்தை கடை பகுதியை சேர்ந்தவர் அபுதாஹிர் சுல்தான் (35). கூலி தொழிலாளர்கள்.

    இவர்கள் 2 பேரும் மைதானம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்த சென்றனர்.

    அப்போது அங்கு மது அருந்திய பின் டாஸ்மாக் பாரில் உணவு பதார்த்தங்கள் கேட்டு அங்கு பணியில் இருந்த சிங்கதுரை என்பவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து சிங்கதுரை மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் லால் என்ற சபீர் அகமது மீது 15 வழக்குகள், சுல்தான் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×