என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்த போது எடுத்த படம்
கடையத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
- ஆலங்குளம் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் சுரேஷ் ராஜன் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
- முகாமில் மாவட்ட பார்வையாளர் கோமதிநாயகம் ,கவுன்சிலர் சக்தி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கடையம் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினரும், ஆலங்குளம் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளருமான சுரேஷ் ராஜன் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
முகாமில் மாவட்ட பார்வையாளர் கோமதிநாயகம், ராஜாமணி, கடையம் சுரேஷ் ,சுந்தரம், மகேஷ் பாண்டியன், ரவீந்திரன், புகாரி மீரா சாகிப், ஒன்றிய துணைச் செயலாளர் முல்லையப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், புஷ்பராணி மிக்கேல், ரம்யா ராம்குமார், அந்தோணி, மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், முகமது யாகூப் தாமஸ், அந்தோணிசாமி செல்வராஜ், கோதை மைதீன், பக்கீர், மேசியா சிங், மாணவரணி மாரியப்பன், மோகன், அருணா, இளங்கோ, அரவிந்த், சசிகுமார், சதாம் உசேன், அழகை முருகன், சுப்பையா, முகமது உசேன், சதீஷ்குமார், கிருஷ்ணன், அர்ஜூன் முத்தையா, பகவதி, அழகேசன், அல்லாபிச்சை ஆர். எஸ். பாண்டியன், கவுன்சிலர் சக்தி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






