என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு தினம்: மாவட்டம் முழுவதும் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை
- தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர் தலைவர் கலைஞர் கருணாநிதி.
- கலைஞரின் 4-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர் தலைவர் கலைஞர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு முதல் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை 19 ஆண்டுகளாக தமிழக முதல்-அமைச்சராகவும் பணியாற்றியவர் கலைஞர்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டவர்.
தாய்மொழி தமிழுக்கு செம்மொழி பெருமையை பெற்றுத்தந்தவர். வளரும் தலைமுறையின் எதிர்காலத்தை வளப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்ட தலைவர் கலைஞரின் 4-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள கழக அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வட்டங்களிலும், நகர, பேரூர் வார்டுகளிலும், ஒன்றியங்களில் உள்ள 199 ஊராட்சிகளில் முக்கிய சந்திப்புகளில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் உருவப் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்த வேண்டும்.
அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கழக மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட மற்றும் அனைத்து நிர்வாகிகள், முன்னணியினர் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்